Wednesday 14 April 2021

'கலாவின் காலை வணக்கம்'.



விடியும்போதே கலா தன் காதலன் நினைவுடனே கண்களை மெல்லத் திறந்தாள். எதிரே நிலைக்கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் காதலன் புகைப்படத்தில் அவளைப்பார்த்தபடி காதலாக சிரித்தான்.

2 நிமிடம் அவள் அதன்மீதிருந்து கண்ணை எடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். பார்க்க பார்க்க கண்களிலும் இதழ்களிலும் சிரிப்பு வழிகிறது.

ஒரு  நிமிடம்தான் பின்பு பெருமூச்சுவிட்டுக்கொண்டாள். ச்செ இந்த கவின் ஏன் இப்படி செய்கிறான்? ஒரு காலத்தில் என்னை எப்படியெல்லாம் அன்போடு பார்த்துக்கொள்வான். தினமும் எனக்கு காலை வணக்கம் சொல்லி என்னை எழுப்பிவிடுவானே. இப்போது என்பொழுது அவன் நினைவுடனே தனிமையாக விடிகிறதே என்று நினைத்துக்கொண்டாள். அவன் முகம் அவளுக்கு ப்ரகாசத்தை கொடுத்தாலும் அவனின் நினைவுகள் அவள் மனதுக்கு வேதனையை கொடுத்தது.

அவள் அன்னை வட்சலா கலாவுக்கு காபியும் காலை உணவும் அவள் அறைக்கே எடுத்து வந்தாள்.

”ஏண்டி உனக்கு அறிவே கிடையாதா? பொம்பளப்பிள்ளையா லட்சனமா சட்டுனு எழுந்துக்காம இப்படி கவினைப்பாத்துட்டே எவ்ளோ நேரம்தான் படுத்துட்டுருப்ப? எழுந்து கிளம்பித்தொலை. எல்லாம் கல்யானத்துக்கு அப்பறம் பார்த்துக்கலாம்” என்றபடி உணவு மேசையில் வைத்துவிட்டு சென்றாள்.

”ஆமாம் உன் மாப்பிள்ளை மன்மதன் பாரு? அழகு சொட்டுது அதான் பாத்துட்டு இருக்கேன் எனக்கு தெரியும் போய் வேலையப்பாரும்மா” என்று கத்தினாள். 

கலாவும் கவினும் கல்லூரி காதலர்கள். அதோடு கலாவின் அப்பா ராகவனும் கவினின் அப்பா ராஜசேகரும் தொழில்முறை நண்பர்கள். வட்சலாவும் கவினின் அம்மா அபிராமியும் உயிர் தோழியர். குடும்ப நட்பும்,  இருவரும் ஒரே கல்லூரி, ஒரே அலுவலகம் என்று வளர்ந்ததால் அவர்களின் நட்பு கல்லூரியிலிருந்தே காதலாய் மாறியது. இரு வீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளப்போகின்றனர்.

 முன்பெல்லாம் கவினும் கலாவும் அலைப்பேசி நிருவனத்திற்கு பெருத்த லாபம் ஈட்டித்தருவார்கள். மணிக்கணக்கில் பேசுவார்கள். கலாவுக்கு காலை வணக்கம் சொல்லாமல் கவினின் பொழுதும் அதை கேட்காமல் கலாவின் பொழுதும் விடியாது. அதை கலா மிகவும் ரசித்தாள். போகப்போக பேசும் நேரம் மிகவும் குறைந்து போனது. காலை வணக்கம் சொல்வதும் நிறுத்தப்பட்டது.

 கவின் பெங்கலூரிலுள்ள மென்பொருள் நிறுவனத்திலும் கலா அதே நிறுவனத்தின்  சென்னைக்கிளையில் பணிபுரிந்ததால் பார்த்துக்கொள்ளும் நேரங்கள் குறைவுதான். தொலைப்பேசிதான் அவர்களுக்கு எல்லாம். ”நீ எனக்கு காலை வணக்கம் சொல்வது மிகவும் பிடித்திருக்கிறது சொல்லு” என்று கவினுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் அவன் சொல்லவில்லை. நாட்கள் போகபோக அவள் மனம் வேதனையும் கோபமும் கொண்டது. அதனால்தான் இந்த சலிப்பெல்லாம்.

மனதில் எரிச்சல் மூண்டாலும், கடமையின் காரணமாக அலுவலகம் கிளம்பிச் சென்றாள் கலா. மாலையில் அவளை அழைத்த கவின் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம்விட்டு வெகுநேரம் பேசினான். அவள் மனதுக்கு நெருக்கமான வகையில் கலா நினைத்தபடி உன்மையான அன்பொழுக பேசினான். இதுதான் நேரம் என்று நினைத்து கலா கேட்டே விட்டாள்.

"கவின் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?" என்று கொஞ்சும் குரலில் கேட்டாள். "என்னமா" என்றான் அவனும் அன்புடன். "உங்களுக்கு உன்மையாவே என்னை பிடிச்சிருக்கா? எனக்கு எது பிடிக்கும்னு சொன்னாலும் நீங்க செய்யறதில்ல. ஒரு காலை வணக்கம்கூட சொல்லுறதில்ல எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கவின். நான் உங்கள் அன்பை பெரிதும் இழக்கிறேன்" என்றாள் அழுகையை அடக்கியபடி.

"ஒரு விஷயம் நடக்கலனா அது ஏன் நடக்கலனு யோசிச்சுப்பாரு. நான் உனக்கு உர்ச்சாகமான குரலில் காலை வணக்கம் சொல்லும்போது நீ மெதுவான குரலில் சோர்வாக சொன்னால்  எனக்கு எப்படி சொல்லத்தோனும்? நீ எந்த மனநிலையில் இருக்கிறாய் என்று எனக்கு எப்படி தெரியும். அதனால்தான் பெரும்பாலும் நான் சொல்வதில்லை." "சரி இதற்கு பதில்  நேரில் சொல்கிறேன்" என்றாள் கலா.

அதன்பிறகு 2 வாரங்கள் கழித்து ஒரு பூங்காவில் காலை 10 மணியளவில் இருவரும் சந்தித்தனர். சிறப்பான அலங்காரத்துடன் வந்திருந்தாள் கலா. கலாவின் கண்களுக்காக மட்டுமே தன்னை பார்த்து பார்த்து அழகு செய்துகொண்டு வந்திருந்தான் கவின். மல்லிகை பூச்சரத்தை நீட்டி காலை வணக்கம் சொல்லி கலாவை ஏறிட்டான் அவன்.

அவள் முகம் நானத்தால் சிவந்து விழிகள் மூடின. குரல் காற்றில் கலந்தபடி மெதுவான காலை வணக்கத்தை அவள் இதழ்கள் வெளியிட்டது. கவின் அந்த அழகு முகத்தையும் அவனுக்காகவே தேக்கிவைத்து வைத்து தினமும் காலை வெளியிட்ட அந்த மோன நிலையை அவன் அலைப்பேசியில் பதிவு செய்து கொண்டான். திரும்ப திரும்ப பார்த்தான். சே இதையா சோர்வு கவலை என்று நினைத்தேன்? கலாவின் கன்னத்தை கிள்ளி மன்னிப்பு வேண்டி இனி இந்த வெட்கத்திற்காகவே தினமும் சொல்கிறேன் என்ற வாக்குறுதி தந்தான்.

அன்றிரவு அந்த புகைப்படத்தை அவன் நாட்குறிப்பில் ஒட்டிவிட்டு, காதலியின் நானச்சிறையில் காலை வணக்கம் கூடவா அடைப்பட்டுவிட்டது? என்று எழுதினான்.

முற்றும்.












 

8 comments:

  1. அருமை அபி
    வித்யா

    ReplyDelete
  2. கதை நன்று.

    பாராட்டுகள் அபிநயா.

    ReplyDelete
  3. Replies
    1. மிக்க நன்றி சார்

      Delete
  4. கதை சிறப்பு.
    காதலியின் நானம் அழகுதான்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அரவிந் சார்.

      Delete