Monday 8 August 2022

பிறந்தநாள் கொண்டாட்டம்

                            


நாள், 25/07/2022. இரவு பதிணொன்றரை மனியலவில், ஸ்மைலிங் ஸ்டார்ஸ் என்ற கூகுல் மீட்டில் ஒவ்வருவராக இனைந்துகொண்டிருந்தனர். ”வாடா முணி, எங்க எல்லாரும்? உடனே போய் கூட்டிட்டுவா. டைம் ஆயிட்ட்இருக்கு” என்றாள் சங்கீதா. முணியின் அழைப்பின் பேரில், ஒருவர் பின் ஒருவராக இனையத் தொடங்கினர். ராஜா இன்பதாசன், பாபுல்நாத், தர்மபாலன், கங்காராஜ், லக்‌ஷ்மி ப்ரியா, அநுசுயா, என நன்பர்கள் ஒருபக்கம் கூகுல் மீட்டில் குழுமிக்கொண்டிருக்க, இன்னொருபக்கம், வீட்டில் கேக் வெட்டுவதர்க்கான ஏர்ப்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. பிரந்தநாள் நாயகிய்ஆன அவள், கேக் வெட்டவும், நன்பர்களின் வாழ்த்து மழையில் நனையவும், ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.



அந்த அரை மணி நேரத்தை, அனைவரும் அரட்டையடித்தபடிக் கழித்துக் கொண்டிருக்க, கடிகார முள் சரியாக நல்லிரவு பண்ணிரெண்டு மணி காட்டியபோது, அந்தக் கோலாகலமான பிரந்தநாள் கொண்டாட்டம் தொடங்கிற்று.  தோழர்களின் கர ஒலியும், வாழ்த்தொலியும், ஒருசேர ஒலிக்க, வெட்டிய கேக் எடுத்து, அனைவருக்கும் ஊட்டி, தானும் உண்டாள் அந்த 33 வயதுக் குழந்தை.



 தான் வாங்கிய புத்தாடையையும், ப்லூடூத் ஹெட்செட்டையும் அவளுக்கு பரிசளித்தான் தர்மபாலன். நேற்றே தான் வாங்கி வந்திருந்த கேக்கை அவளுக்கு ஊட்டிவிட்டு தைத்து வாங்கி வந்த மற்றொரு உடையை பரிசளித்தாள் அவளது தோழி ப்ரியா. மூவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி, முகத்தை கேக்கால் அலஞ்கரித்து மகிழ்ந்தனர். வாழ்த்துகளுடன் கூடிய பேச்சொலியோடும், சிரிப்பொலியோடும், அந்த நாளை நிரைவு செய்தாள், இன்னமும் குழந்தை மனம் மாராத அந்தப் பெண்.



 மரு நாள் அதிகாலையில் ஏராளமான வாழ்த்துச் செய்திகளைச் சுமந்துவந்த அலைபேசியழைப்புகள் அவளது தூக்கத்தைத் தொல்லை செய்ய, எழ முடியாமல் தூக்கத்திலிருந்து எழுந்து, அண்றைய நாள் கொண்டாட்டன்களுக்குத் தயாரானாள் அவள்.

புத்தாடை உடுத்தி, பூச்சூடி, புதுப்பொலிவோடு அவளுக்குப் பிடித்த கடவுள் கண்ணனை காண சென்று வந்தாள். வீட்டிலேயே தயாரித்த இட்லி, பொங்கல், வடை கேசரி போன்ற பலமான காலை உணவை உண்டுவிட்டு, வருபவர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்வித்து தானும் மகிழ்ந்திருந்தாள்.



 மதியம் பன்னிரண்டு மணியளவில் அவளது தோழியும் உடன்பிறவா சகோதரியுமான சங்கீதா போன் செய்தாள். “சொல்லு அக்கா, பாப்பா சாயந்திரம் உனக்காக லௌலி ரோசஸ் க்லப்ல ஒரு ப்ரோகிராம் இருக்கு. உன்னை நீ ஃப்ரீ பண்ணிக்கோ டா. எதுக்கு அக்கா இதெல்லாம் வேண்டாமே.” என்றாள் வெட்க பூ பூத்தபடி. “என் அன்பு தங்கச்சிக்கு நாங்க கொடுக்குற பரிசு இது. வேண்டாம் சொல்லக்கூடாது. கொன்னுடுவேன் ஒழுங்கா நேரத்துக்கு வந்து சேரு.” என்று செல்லமாய் மிரட்டிவிட்டு காலை கட் செய்தாள் சங்கீதா.

அதன்பிறகு தனது தோழர்களான தர்மபாலன் மற்றும் ப்ரியாவுடன் ஹோட்டலுக்கு சென்று மட்டன் பிரியாணி, சிக்கன்65, வஞ்சரமீன் வருவல், ஐச்கிரீமை சாப்பிட்டுவிட்டு, தர்மபாலன் பரிசாய் தந்த ப்லூடூத் ஹெட்செட்டில் பாட்டு கேட்டபடி உறங்கிப்போனாள்.



மாலையில் எழுன்ந்து ரிஃப்ரெஷ் செய்துவிட்டு, காஃபி பிச்கேட் பருகிய பின் சங்கீதா ஏற்பாடு செய்திருந்த ப்ரோகிராமிற்கு தயாரானாள். க்லப்ஹௌசிற்குள் சென்றபோது கங்காராஜ் இன்று பிறந்தநாள் காணும் செல்வி rj அபிநயாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பாட்டுப்போட்டி முதல் 3 பரிசு என்று அறிவித்துக்கொண்டிருந்தார். ஆம் அன்று என்னுடைய பிறந்தநாள்தான். 

முதல் முறையாக, நிறைய வாழ்த்துகளுடனும், நிறைய ஆச்சரியங்களுடனும், கோலாகலமாக அந்த நாள் கொண்டாடப் பட்டுக்கொண்டிருந்தது. பங்கேற்பாலர்கள் ஒவ்வொருவராக வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்தனர். நடுவர் திருமதி சுசிலா வந்தவுடன் விழா தொடங்கியது. நடுவரின் வாழ்த்துப் பாடலும், வழக்கமான வரவேர்ப்புரையும் வாழ்த்துரையும், மேலும் சில பாடல்களும், விழாவை அலங்கரிக்க, 4 சுற்றுகளுடன் நடுவர் போட்டியை இனிதே நடத்திக் கொடுத்தார்.



 இடையில், என் பிரந்த நாள் சிரப்பாக, நான் ஒரு ஒலிக்கோப்பு உருவாக்கியிருந்தேன். எனக்குப் பிடித்த தலைவர்களான, சிவாஜி, s.p.b., சிவகுமார், விஜெய் போண்றவர்களிடம், ஆசிர்வாதம் வாங்குவதைப் போண்றதான ஒலிக்கோப்பு அது. என்னையும் மற்றவர்களையும் சந்தோஷப் படுத்தும் வண்ணம், சங்கீதா க்லப்பில் அந்த ஒலிக்கோப்பை ஒலிபரப்பினார். இருதியாக, எனது நண்றிகளையும், சந்தோஷ்அங்களையும் வார்த்தைகளால் வடித்து, ஒரு சிரு உரையை வழங்கிணேன். முணீஷ்வரனின் நண்றி உரையோடு, நிகழ்ச்சி இனிதே நிரைவுற்றது.



விடிந்தது முதல், அந்நாள் முடியும்வரை, மகிழ்ச்சியில் என்னை திளைக்கவைத்து, துக்கம் கொஞ்சமும் அணுகாமல் பார்த்துக்கொண்ட என் சுற்றமும் நட்பும் கிடைக்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். யான் பெற்ற இன்பத் துளிகளை எழுத்துகளால் கோர்த்து, நீண்ட நெடிய நாட்களுக்குப் பிரகு, உங்களின் கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறேன். என் வலைப் பதிவு உட்பட, யார் வலைப் பதிவையும், பார்க்க முடிவதில்லை. வலைப் பதிவுக்குள் சென்று நெடுநாட்களாகிவிட்டது. சில சொந்த வேலைகள் காரனமாக, எழுதுவதும் படிப்பதும் அப்படியே நின்றுவிட்டது. மீண்டும் மனதையும், மூளையையும் தூசு தட்டி புத்துணர்வோடு புதிதாய் எழுதத் தொடங்கியிருக்கிறேன். மெருகேருகிரதா என்று பார்ப்போம். நன்றி. 

10 comments:

  1. அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. எமது வாழ்த்துகளும்கூடி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கில்ல்லர்ஜி சார். நீண்ட நாட்களுக்கு பிறகு தஞ்களின் பின்னூட்டம் கான்பதில் மகிழ்ச்சி.

      Delete
  3. சூப்பர் அருமையான பதிவு மேடம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே

      Delete
  4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அபி! அழகான கொண்டாட்டம். God Bless!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கீதா மேடம். தங்களின் பின்னூட்டம் கான்பதில் மிகவும் மகிழ்ச்சி. நலம் நலமறிய ஆவல்

      Delete